இறுதிப்போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் முதல்நாள் நிகழ்வுகள் இன்று நடைபெற்றுள்ளன.
யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன் உட்பட்ட கட்சியின் பிரமுகர்கள் பங்குகொண்டிருந்தனர்.
கொரோனா அச்சம் காரணமாக சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முள்ளிவாய்க்கால்